குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
10/12/2010

திருக்குறள் அரங்கம் - 5

கம்பன் கழக மகளிர் அணி நடத்தும்

திருக்குறள் அரங்கம் - 5

நாள்:
திருவள்ளுவர் ஆண்டு 2041
17ஃ10ஃ2010 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14-00 மணியிலிருந்து 18-00 மணிவரை

இடம்:
கம்பன் கழகம்
6 rue Paul Langevin
95140 Garges les Gonesse
tél: 01 39 93 17 06


13.00 மணி : மாணவ மாணவியர் திருக்குறள் வகுப்பு
: செவாலியே சிமோன் யூபர்ட்

14.00 மணி : சொற்பொழிவு
: திருமிகு சி. சிவகுமார்
: தலைப்பு
: பெண்ணியப் பார்வையில் திருக்குறள்

: தேனீர் வழங்குதல்

15.00 மணி : பாட்டரங்கம்
: தலைப்பு
: தேமதுரத் தமிழோசை ......

: திருக்குறள் உரை (201 முதல் 250 வரை)

: 21. தீவினை அச்சம்
: திருமதி சுகுணா சமரசம்

15.30 மணி : 22. ஒப்புரவு அறிதல்
: செவாலியே சிமோன் யூபர்ட்

16.00 மணி : 23. ஈகை
: திருமதி கோமதி சிவஅரி

16.30 மணி : 24. புகழ்
: திருமதி பிரபாவதி அருட்கண்ணன்

17.00 மணி : 25. அருள் உடைமை
: திருமிகு பி. எச். பற்குணராசா (யோகானந்தவடிகள்)

17.30 மணி : சிற்றுண்டி வழங்குதல்

அன்புடன்

திருமதி. சிமோன் இராசேசுவரி (தலைவி)
01 30 38 68 11
திருமதி. ஆதிலட்சுமி வேணுகோபால் (செயலாளர்)
01 48 36 66 85
திருமதி. லெபோ லூசியா (பொருளாளர்)
01 39 86 29 81

KAMBANe KAJAGAM - FRANCE
6, rue Paul Langevin, 95140 Garges les Gonesse, France
www.kambane.com e.mail: kambane2007@yahoo.fr

குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.