குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
3/31/2011

குறளரங்கம் 8 - கவியரங்கம்

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர்! வணக்கம்.

கடந்த 26.3.2011 சனிக்கிழமை பிற்பகல்,கம்பகழகத்தின் தமிழில் மரபுக் கவிதை எழுதும் பயிற்சிப் பட்டறையும் அதைத் தொடர்ந்துத்கம்பன் கழக "மகளிரணி"யின் "திருக்குறள் அரங்கம்" மற்றும் "கவியரங்கம்" நிகழ்ச்சிகளும் , கம்பன் கழகத் தலைவர், கவிஞர். திரு. கி;பாரதிதாசன் அவர்கள் இல்லத்தில் (கம்பன் இல்லம்) மிகச் சிறப்பாக நடைபெற்றன.
இலக்கண வகுப்பு :2

பிற்பகல் இரண்டு மணிமுதல் மூன்று மணிவரை மரபுக்கவிதை, இலக்கண வகுப்பைத் திருமிகு கவிஞர் .கி; பாரதிதாசன் அவர்கள் நடத்த, திருவாளர்கள்: தணிகா சமரசம், சிவ. சிவகுமார், பழ. சிவஅரி, லிங்கம். செயமாமல்லன், தணிகை வேல், கோபாலகிருட்டிணன் பார்த்தசாரதி, சு. மதிவாணன், பாமல்லன், இரா. இராஜேஷ், கார்த்திகேயன், ஆதிஞானவேல் மற்றும், திருமதியர் : ஆதிலட்சுமி வேணுகோபால், சுகுணா சமாரசம், கோமதி சிவஅரி, தனசெல்வி தம்பி ஆகியோர் பயிற்சியாளர்களாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர்;

குறள் அரங்கம்:8

இலக்கண வகுப்பைத் தொடர்ந்து, "குறள் அரங்கம்" நிகழ்வு தொடங்கியது; இதில், அறத்துப்பால்,த்துரவரவியல் 31 ஆவது அதிகாரம் முதல் 35 ஆவது அதிகாரம் வரை, அனைவராலும் ஒருமித்த குரலில் வசிக்கப் பட்டன. . ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தனித்தனியாக ஒவ்வொருவர் விளக்கமளித்தனர்;

விளக்கவுரை அளித்தவர்கள்:

31 ஆவது அதிகாரம், வெகுளாமை.---திருமதி.சரோசா தேவராசு
32 ஆவது அதிகாரம், இன்னா செய்யாமை------திருமதி. அருணா செல்வம்
33 ஆவது அதிகாரம், கொல்லாமை;-----திருமிகு கோபாலகிருட்டிணன் பார்த்தசாரதி
34 ஆவது அதிகாரம், நிலையாமை.-----திருமதி சுகுணா சமரசம்
35 ஆவது அதிகாரம் துறவு -----திருமிகு தேவராசு, ஆகியோர் ஆவர்;

அரங்கத்தில் சுவைஞர்களாக, முப்பத்து மூன்று பேர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இடையிடையே எழும் சந்தேகங்களுக்குப் பேராசிரியர்; திருமிகு லெபோ பெஞ்சமின் அவர்கள் மிகச் சிறப்பாக விளக்கமளித்தது அரங்குக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது. பின்னர் சிறிய இடைவேளையில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது;

கவிதையரங்கம்:

தேநீர் விருந்திற்குப் பின் "கண்கள்" என்னும் தலைப்பில் கவிதையரங்கம் தொடங்கியது; கவிஞர் திரு கி. பாரதிதாசன் அவர்கள் தொகுத்து வழங்கக் கவிஞர்கள்: சரோசா தேவராசு, அருணா செல்வம், பாமல்லன், தேவராசு, இவர்களோடு, தற்போது ,மரபுக்கவிதை இலக்கணத்தைப் பயின்று வரும், திருமிகு தணிகா சமரசம் அவர்களும் திருமதி கோமதி சிவஅரி அவர்களும் கலந்து கொண்டுத் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள்.கவிஞர் கி; பாரதிதாசன் அவர்களின் கவிதையும் சேர்ந்து நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது


சிறப்புச் சொற்பொழிவு:

"தமிழர் பகைவர்" என்னும் தலைப்பில் திருமிகு சிவ. சிவகுமார் அவர்கள் ஒப்பாய்வுடன் சிறப்பான முறையில் சொற்பொழிவு ஆற்றினார்.

இரவுச் சிற்றுண்டி விருந்தோம்பலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவேறின;

சரோசா தேவராசு
3/15/2011

குறளரங்கம் - 8

குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.