குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்

அறத்துப்பால்

1. அறத்துப்பால்

1.1 பாயிரவியல்

    1.1.1 கடவுள்வாழ்த்து

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு. 1

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின். 2

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார். 3

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல. 4

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார். 6

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது. 7

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது. 8

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை. 9

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார். 10

    1.1.2 வான்சிறப்பு


    வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய து¡உம் மழை. 12

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி. 13

    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால். 14

    கெடுப்பது¡உம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பது¡உம் எல்லாம் மழை. 15

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண்பு அரிது. 16
    3

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின். 17

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18

    தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின். 19

    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு. 20

    1.1.3. நீத்தார் பெருமை


    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு. 21

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு. 23

    உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி. 25

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார். 26

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு. 27

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும். 28

    குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காத்தல் அரிது. 29

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான். 30

    1.1.4. அறன்வலியுறுத்தல்


    சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினு¡உங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31

    அறத்தினு¡உங்கு ஆக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு. 32

    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல். 33

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
    ஆகுல நீர பிற. 34

    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம். 35

    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

    அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37
    4

    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அ·தொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல். 38

    அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
    புறத்த புகழும் இல. 39

    செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி. 40

    1.2. இல்லறவியல்

    1.2.1. இல்வாழ்க்கை


    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை. 41

    துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை. 42

    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43

    பழியஞ்சிப் பாத்து¡ண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது. 45

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்? 46

    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை. 47

    ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து. 48

    அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அ·தும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உ¨ற்யும்
    தெய்வத்துள் வைக்கப் படும். 50

    1.2.2 வாழ்க்கைத் துணைநலம்


    மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51

    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல். 52

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை? 53

    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின். 54

    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்பு ம் மழை. 55

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56

    சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை. 57
    5
    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு. 58

    புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை. 59

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு. 60

    1.2.3 புதல்வரைப் பெறுதல்


    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற. 61

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின். 62

    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினையான் வரும். 63

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ். 64

    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65

    குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர். 66

    தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல். 67

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய். 69

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல் எனும் சொல். 70

    1.2.4 அன்புடைமை


    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும். 71

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு. 71

    அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு. 73

    அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 74

    அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75

    அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அ·தே துணை. 76

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம். 77

    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று. 78
    6
    புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79

    அன்பின் வழியது உயிர்நிலை அ·திலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு. 80

    1.2.5. விருந்தோம்பல்


    இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு. 81

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று. 82

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று. 83

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல். 84

    வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம். 85

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்வருந்து வானத் தவர்க்கு. 86

    இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன். 87

    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார். 88

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு. 89

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து. 90

    1.2.6 இனியவைகூறல்


    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91

    அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின். 92

    முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம். 93

    துன்புறு¡உம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
    இன்புறு¡உம் இன்சொ லவர்க்கு. 94

    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற. 95

    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின். 96

    நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல். 97

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும். 98

    இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது? 99
    7
    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 100

    1.2.7 செய்ந்நன்றி அறிதல்


    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது. 101

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது. 102

    பயன்து¡க்கார் செய்த உதவி நயன்து¡க்கின்
    நன்மை கடலின் பெரிது. 103

    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார். 104

    உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106

    எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமந் துடைத்தவர் நட்பு. 107

    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று. 108

    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

    1.2.8 நடுவு நிலைமை

    தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின். 111

    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 112

    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல். 113

    தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும். 114

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி. 115

    கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
    நடுவொரீஇ அல்ல செயின். 116

    கெடுவாக வையாது உலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 117

    சமன்செய்து சீர்து¡க்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி. 118

    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின். 119

    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின். 120
    8
    1.2.9. அடக்கமுடைமை

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும். 121

    காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினு¡உங் கில்லை உயிர்க்கு. 122
     
    செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின். 123

    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது. 124

    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125

    ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து. 126

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127

    ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும். 128

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு. 129

    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130

    1.2.10. ஒழுக்கமுடைமை

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும். 131

    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அ·தே துணை. 132

    ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும். 133

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

    அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு. 135

    ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து. 136

    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி. 137

    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும். 138

    ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல். 139

    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார். 140
    9
    1.2.11. பிறனில் விழையாமை

    பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
    அறம்பொருள் கண்டார்கண் இல். 141

    அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல். 142

    விளிந்தா¡¢ன் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகு வார். 143

    எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல். 144

    எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி. 145

    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண். 146

    அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
    பெண்மை நயவா தவன். 147

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. 148

    நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
    பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 149

    அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
    பெண்மை நயவாமை நன்று. 150

    1.2.12. பொறையுடைமை

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151

    பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று. 152

    இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை. 153

    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
    போற்றி யொழுகப் படும். 154

    ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 155

    ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ். 156

    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று. 157

    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
    தகுதியான் வென்று விடல். 158

    துறந்தாரின் து¡ய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159

    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160
    10

    1.2.13 அழுக்காறாமை

    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
    அழுக்காறு இலாத இயல்பு. 161

    விழுப்பேற்றின் அ·தொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின். 162

    அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணாது அழுக்கறுப் பான். 163

    அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக்கு அறிந்து. 164

    அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
    வழுக்க§யும் கேடீன் பது. 165

    கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது¡உம்
    உண்பது¡உம் இன்றிக் கெடும். 166

    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும். 167

    அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும். 168

    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும். 169

    அழுக்கற்று அகன்றாரும் இல்லை அ·துஇல்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 170

    1.2.14. வெ·காமை

    நடுவின்றி நன்பொருள் வெ·கின் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும். 171

    படுபயன் வெ·கிப் பழிப்படுவ செய்யார்
    நடுவன்மை நாணு பவர். 172

    சிற்றின்பம் வெ·கி அறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர். 173

    இலமென்று வெ·குதல் செய்யார் புலம்வென்ற
    புன்மையில் காட்சி யவர். 174

    அ·கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
    வெ·கி வெறிய செயின். 175

    அருள்வெ·கி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெ·கிப்
    பொல்லாத சூழக் கெடும். 176

    வேண்டற்க வெ·கியாம் ஆக்கம் விளைவயின்
    மாண்டற் கரிதாம் பயன். 177

    அ·காமை செல்வத்திற்கு யாதெனின் வெ·காமை
    வேண்டும் பிறன்கைப் பொருள். 178

    அறனறிந்து வெ·கா அறிவுடையார்ச் சேரும்
    திறன்அறிந் தாங்கே திரு. 179

    இறலீனும் எண்ணாது வெ·கின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு. 180
    11
     1.2.15. புறங்கூறாமை

    அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது. 181

    அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
    புறனழீஇப் பொய்த்து நகை. 182

    புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
    அறங்கூற்றும் ஆக்கத் தரும். 183

    கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
    முன்னின்று பின்நோக்காச் சொல். 184

    அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும். 185

    பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
    திறன்தெரிந்து கூறப் படும். 186

    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர். 187

    துன்னியார் குற்றமும் து¡ற்றும் மரபினார்
    என்னைகொல் ஏதிலார் மாட்டு. 188

    அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
    புன்சொல் உரைப்பான் பொறை. 189

    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 190

    1.2.16. பயனில சொல்லாமை

    பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும். 191

    பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
    நட்டார்கண் செய்தலிற் றீது. 192

    நயனிலன் என்பது சொல்லும் பயனில
    பாரித் துரைக்கும் உரை. 193

    நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொல் பல்லா ரகத்து. 194

    சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின். 195

    பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்
    மக்கட் பதடி யெனல். 196

    நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று. 197

    அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பயன் இல்லாத சொல். 198

    பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
    மாசறு காட்சி யவர். 199

    சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல். 200
    12
    1.2.17. தீவினையச்சம்

    தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை என்னும் செருக்கு. 201

    தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும். 202

    அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல். 203

    மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. 204

    இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
    இலனாகும் மற்றும் பெயர்த்து. 205

    தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
    தன்னை அடல்வேண்டா தான். 206

    எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
    வீயாது பின்சென்று அடும். 207

    தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அடிஉறைந் தற்று. 208

    தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
    துன்னற்க தீவினைப் பால். 209

    அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
    தீவினை செய்யான் எனின். 210

    1.2.18. ஒப்புரவறிதல்

    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
    என் ஆற்றுங் கொல்லோ உலகு. 211

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு. 212

    புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
    ஒப்புரவின் நல்ல பிற. 213

    ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும். 214

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு. 215

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின். 216

    மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின். 217

    இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர். 218

    நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
    செய்யாது அமைகலா வாறு. 219

    ஒப்புரவி னால்வரும் கேடெனின் அ·தொருவன்
    விற்றுக்கோள் தக்க துடைத்து. 220
    13
    1.2.19. ஈகை

    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221

    நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று. 222

    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே யுள. 223

    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு. 224

    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின். 225

    அற்றார் அழிபசி தீர்த்தல் அ·தொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி. 226

    பாத்து¡ண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது. 227

    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர். 228

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல். 229

    சாதலின் இன்னாத தில்லை இனிதது¡உம்
    ஈதல் இயையாக் கடை. 230

    1.2.20. புகழ்

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு. 231

    உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ். 232

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன் றில். 233

    நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தேள் உலகு. 234

    நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
    வித்தகர்க் கல்லால் அரிது. 235

    தோன்றின் புகழொடு தோன்றுக அ·திலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று. 236

    புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
    இகழ்வாரை நோவது எவன்? 237

    வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
    எச்சம் பெறாஅ விடின். 238

    வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
    யாக்கை பொறுத்த நிலம். 239

    வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

    வாழ்வாரே வாழா தவர். 240

    இல்லறவியல் முற்றிற்று
    14
    1.3 துறவறவியல்

    1.3.1 அருளுடைமை

    அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள. 241

    நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அ·தே துணை. 242

    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல். 243

    மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை. 244

    அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி. 245

    பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார். 246

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247

    பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
    அற்றார்மற் றாதல் அரிது. 248

    தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம். 249

    வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
    மெலியார்மேல் செல்லு மிடத்து. 250

    1.3.2. புலான்மறுத்தல்

    தன்னு¡ன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்? 251
     
    பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

    படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னு¡க்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம். 253

    ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
    பொருளல்லது அவ்வூன் தினல். 254

    உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு. 255

    தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். 256

    உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ணது உணர்வார்ப் பெறின். 257

    செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும். 260
    15
    1.3.3 தவம்

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு. 261

    தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
    அ·திலார் மேற்கொள் வது. 262

    துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம். 263

    ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும். 264

    வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும். 265

    தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. 266

    சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267

    தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
    மன்னுயி ரெல்லாந் தொழும். 268

    கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். 269

    இலர்பல ராகிய காரணம் நோற்பார்
    சிலர்பலர் நோலா தவர். 270

    1.3.4. கூடாவொழுக்கம்

    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும். 271

    வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
    தான்அறி குற்றப் படின். 272

    வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
    புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 273

    தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 274

    பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
    ஏதம் பலவுந் தரும். 275

    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணார் இல். 276

    புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
    முக்கிற் கரியார் உடைத்து. 277

    மனத்தது மாசாக மாண்டார் நீராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர். 278

    கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
    வினைபடு பாலால் கொளல். 279

    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின். 280
    16
    1.3.5. கள்ளாமை

    எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281

    உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல். 282

    களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
    ஆவது போலக் கெடும். 283

    களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
    வீயா விழுமம் தரும். 284

    அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
    பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285

    அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
    கன்றிய காத லவர். 286

    களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்கண்ட இல். 287

    அளவற§ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
    களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288

    அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
    மற்றைய தேற்றா தவர். 289

    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
    தள்ளாது புத்தே ளுளகு. 290

    1.3.6. வாய்மை

    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல். 291

    பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின். 292

    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293

    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன். 294

    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானஞ்செய் வாரின் தலை. 295

    பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
    எல்லா அறமுந் தரும். 296

    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று. 297

    புறள்து¡ய்மை நீரான் அமையும் அகந்து¡ய்மை
    வாய்மையால் காணப் படும். 298

    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு. 299

    யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற. 300
    17
    1.3.7 வெகுளாமை

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கின்என் காவாக்கால் என்? 301

    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்அதனின் தீய பிற. 302

    மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
    பிறத்தல் அதனான் வரும். 303

    நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
    பகையும் உளவோ பிற. 304

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம். 305

    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும். 306

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 307

    இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று. 308

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின். 309

    இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை. 310

    1.3.8 இன்னாசெய்யாமை

    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
    செய்யாமை மாசற்றார் கோள். 311

    கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள். 312

    செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
    உய்யா விழுமந் தரும். 313

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல். 314

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை. 315

     இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கண் செயல். 316

    எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை. 317

    தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க்கு இன்னா செயல். 318

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
    பிற்பகல் தாமே வரும். 319

    நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
    நோயின்மை வேண்டு பவர். 320
    18
    1.3.9 கொல்லாமை

    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
    பிறவினை எல்லாந் தரும். 321

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நு¡லோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322

    ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று. 323

    நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    கொல்லாமை சூழும் நெறி. 324

    நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
    கொல்லாமை சூழ்வான் தலை. 325

    கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326

    தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை. 327

    நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை. 328

    கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
    புன்மை தெரிவா ரகத்து. 329

    உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
    செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330

    1.3.10 நிலையாமை

    நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை. 331

    கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அதுவிளிந் தற்று. 332

    அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல். 333

    நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
    வாளது உணர்வார்ப் பெறின். 334

    நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
    மேற்சென்று செய்யப் படும் 335

    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு. 336

    ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
    கோடியும் அல்ல பல. 337

    குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
    உடம்பொடு உயிரிடை நட்பு. 338

    உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு. 339

    புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு. 340
    19
    1.3.11 துறவு

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன். 341

    வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டுஇயற் பால பல. 342

    அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு. 343

    இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து. 344

    மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க்கு உடம்பும் மிகை. 345

    யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும். 346

    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர் க்கு. 347

    தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர். 348

    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
    நிலையாமை காணப் படும். 349

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு. 350

    1.3.12 மெய்யுணர்தல்

    பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு. 351

    இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு. 352

    ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வானம் நணிய துடைத்து. 353

    ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355

    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி. 356

    ஓர்த்துள்ளம் உள்ளது உணர§ன் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357

    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு. 358

    சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய். 359

    காமம் வெகுளி மயக்கம் இ¨வ்முன்றன்
    நாமம் கெடக்கெடும் நோய். 360
    20
    1.3.13 அவாவறுத்தல்

    அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
    தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும். 362

    வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அ·தொப்பது இல். 363

    து¡உய்மை என்பது அவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும். 364

    அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
    அற்றாக அற்றது இலர். 365

    அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா. 366

    அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
    தான்வேண்டு மாற்றான் வரும். 367

    அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அ·துண்டேல்
    தவாஅது மேன்மேல் வரும். 368

    இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின். 369

     ரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும். 370

    1.4 ஊழியல்
    1.4.1. ஊழ்

    ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்றும் மடி. 371

    பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலு¡ழ் உற்றக் கடை. 372

    நுண்ணிய நு¡ல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும். 373

    இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு. 374

    நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
    நல்லவாம் செல்வம் செயற்கு. 375

    பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம. 376

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377

    துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
    ஊட்டா கழியு மெனின். 378

    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
    அல்லற் படுவ தெவன்? 379

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும். 380

    ஊழியல் முற்றிற்று
    அறத்துப்பால் முற்றிற்று
    குறளரங்கம் 7



    கோப்புகள்

    தெள்ளு தமிழ்நடை,
    சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
    அள்ளு தொறுஞ்சுவை
    உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
    கொள்ளும் அறம்,பொருள்
    இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
    வள்ளுவ னைப்பெற்ற
    தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

    வெல்லாத இல்லை
    திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
    பொல்லாத தில்லை
    புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
    செல்லாத தில்லை
    பொதுமறை யான திருக்குறளில்
    இல்லாத தில்லை
    இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

    தொன்னூற் படியில்லை!
    திராவிடர் தூய கலைஒழுக்கம்
    பின்னூற் படியிற்
    பெரும்படி இல்லை! பிழைபடியா
    அந்நூற் படிதிரு
    வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
    முந்நூற்று முப்பதும்
    முத்தாக மூன்று படியளந்தே!

    கன்னல் இதுஎனக்
    காட்டியே மக்கள் கடித்துணுமோர்
    இன்னல் தராது
    பருகுக சாறென ஈவதுபோல்
    பின்னல் அகற்றிப்
    பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
    பன்னல் உடையது
    வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

    வித்திப் பிழைக்கும்
    உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
    ஒத்துப் பிழைக்க
    வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
    எத்துப் பழுத்தவர்
    ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
    அத்திப் பழமன்று;
    தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

    -பாவேந்தர் பாரதிதாசன்

    பக்க எண்ணி
    37759
    Blogger இயக்குவது.